கோவிட்-19 இன்னும் முடியல, அடுத்து கோவிட்-22 வரப்போகுதாம் – மக்களே உஷார்!
உலகில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முடிவதற்குள் கோவிட்-22 என்ற புது வகை வைரஸ் வரவுள்ளதாக நோயெதிர்ப்பு நிபுணர் சாய் ரெட்டி கூறியுள்ளார்.
புதிய கோவிட்-22 வைரஸ்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 தொற்று, கடந்த 2017-ல் பரவி பல மக்களின் உயிரை காவு வாங்கியது. இதை தடுக்க அனைத்து இடங்களிலும், தொற்றின் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகளின் பயன்பட்டால் ஓரளவு தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து “டெல்டா மற்றும் டெல்டா பிளஸ்” என நாடுகளிடையே உள்ள மக்களிடம் பரவி பீதியை ஏற்படுத்தி வந்தது.
பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!
இதில் இந்த இரண்டாம் அலை பரவல் முடிவுக்கு வரும் முன்பே அடுத்த மாதத்தின் இறுதியில் மூன்றாம் அலை பரவல் ஆரம்பித்து உச்சம் தொடும் என ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கோவிட்-19 எனப்படும், கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் முன்னரே கோவிட்-22 என்ற புதிய வகை சார்ஸ் எனப்படும் வைரஸ் பரவி மக்களை பலி வாங்க உள்ளதாக தொற்று நோய் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் பரவலை தடுக்க தற்போது நம்மிடையே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் போதாது எனவும் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த வைரஸ் பீட்டா மற்றும் காமா ஆகியவற்றிலிருந்து வந்த கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருவாகியதை போல் இந்த சார்ஸ் வைரசும் உருமாறினால், நம்மால் கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். இந்த தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தற்போது உள்ள தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், அதை தவற விட்டவர் இந்த சார்ஸ் எனப்படும் கோவிட்-22 வைரஸை பரப்பும் நோய் பரப்பிகளாக இருப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என அறிவுறுத்தி உள்ளனர்.