தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் – கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை வங்கிகள் மூலமாக உறுப்பினர் அல்லாத விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறையின் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பயிர்க்கடன்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தமிழக அரசு ரூ.4,000 கொரோனா நிவாரண நிதியாகவும், 14 வகையான மளிகை பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தது. நிவாரணத் தொகையின் மே மாத தவணையாக ரூ.2,000 முதல் கட்டமாக 99.9% மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் நிவாரண தொகையின் இரண்டாம் கட்ட ரூ.2,000 வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவிடத்தது.
தினசரி இரவு 9 மணிமுதல் இரவுநேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த திட்டத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதனுடன் சேர்த்து 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6,49,083 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத் துறையின் மூலமாக அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இதுவரை உறுப்பினராக இல்லாத விவசாயிகளும் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டு பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளது. நியாய விலைக்கடைகளில் சரியான எடைகளில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நிவாரண நிதி பெறாமல் விடுபட்டவர்களுக்கும் அந்த தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.