தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் வீட்டு உபயோக பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 21 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பொருட்களை விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் பொருட்களை வழங்குவதில் சிக்கலும் எழுந்தது. குறைவான ஊழியர்கள் அதிக பணிகளை மேற்கொண்டு வருவதால் அவர்களுக்கு பணி சுமை அதிகரித்து வருகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் உள்ள 3,803 காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
IPL 2022: ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் 33,141 பகுதி நேர மற்றும் முழு நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் காலியாக உள்ள 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தனியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தங்களது பணிச்சுமையை குறைக்க ஒரு நியாயவிலை கடைக்கு ஒரு விற்பனையாளர் ஒரு கட்டுநர் என்ற வகையில் ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.