TNPSC புதிய அறிவிப்பு – கூட்டுறவுத் துறையில் ரூ.56,100 சம்பளத்தில் வேலை! முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. இதனை தொடர்ந்து TNPSC தேர்வாணையம் கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்பு
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச டிக்கெட் வெளியீடு!
இப்பணிக்கு 01.07.2022 அன்று நிலவரப்படி 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணியில் சேர விரும்புவர்கள் எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இப்பணியில் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 30ம் தேதி அன்று காலை தாள்-I மற்றும் மதியம் தாள்-II நடைபெறும்
இப்பணியில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பிப்ரவரி 21ம் தேதிக்குள் பதிவு செய்து முடித்திருக்க வேண்டும். அத்துடன் நிரந்தர பதிவு உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இத்தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது. ஆனால் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.tnpsc.gov.in/