தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது நிபந்தைகளை வரையறுக்க கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வாங்கியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. நிபந்தைகளின் அடிப்படியில் தகுதியானவர்க்ளுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாக்குறுதி அளித்தபடி எவ்வித நிபந்தைகளும் இன்றி நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பலரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் பெற தகுதியானோர், தகுதியற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களாக உள்ளனர். மீதம் 35,37,693 பேர் தகுதியற்றவர்களாக உள்ளனர்.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் கூட்டுறவு சங்கங்களுக்குக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் நகைக் கடன் தள்ளுபடியில் நிபந்தனைகள் மற்றும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். ள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.