சமையல் எண்ணெய் மீதான வரி குறைப்பு – லிட்டருக்கு 5 ரூபாய் வரை சரியும் விலை? இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
நாட்டில் சமையல் எண்ணெய் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அதன் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் அதன் விலை ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.
சமையல் எண்ணெய்:
பண்டிகை காலங்களில் சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பனை, சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களுக்கான அடிப்படை வரிகள் மேலும் குறைக்கப்படுவதால் ரூ.1,100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.4-5 வரை குறையும் என்று தொழில்துறை தெரிவித்துள்ளது. ஆனால் கச்சா, பாமாயில் மீதான விவசாய வரியானது 17.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளை மீண்டும் மூட திடீர் உத்தரவு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
செப்டம்பர் 11 முதல் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த எண்ணெய்களின் சுங்க வரிகளை குறைக்க நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. நிதி அமைச்சக அறிவிப்பின் படி, கச்சா பாமாயிலின் அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பின் மூலம், கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான வரி 24.75 சதவீதமாக குறையும், அதேசமயம் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயோயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான வரி 35.75 சதவீதமாக இருக்கும்.
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை – அமைச்சர் எச்சரிக்கை!
நாட்டில் சில்லறை சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு வருடத்தில் 41 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய்களின் விலையை கட்டுப்படுத்த, மொத்த விற்பனையாளர்கள், ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் பதுக்கலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது மட்டுமல்லாமல், சில்லறை விற்பனையாளர்கள் அனைத்து சமையல் எண்ணெய் பிராண்டுகளின் விலைகளையும் வெளிப்படையாகக் காட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.