இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு? மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் சமீப காலமாக சமையல் எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், பாமாயில், சோயாபீன், சன்பிளவர் முதலிய எண்ணெய்யின் விலை ரூ.10 வரைக்கும் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
எண்ணெய் விலை:
இந்தியாவிற்கு தேவைப்படும் சமையல் எண்ணெய்யில் கிட்டதட்ட 60 சதவீதம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், சர்வதேச சந்தையிலும் எண்ணெய்யின் விலை உயர்த்தப்படுவதால் சில்லரை விற்பனையிலும் எண்ணெய் விலை உயருகிறது. அதன் பின்னர், சமீப காலமாக இந்தியாவில் சமையல் எண்ணெய்யின் விலை குறைந்து வருகிறது. அதாவது, கடந்த மாதத்தில் மட்டுமே சமையல் எண்ணெய்யின் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரைக்கும் குறைக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், நேற்று இந்தியாவில் உள்ள அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பெறும் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கும் சமையல் எண்ணெய்யின் விலையில் இருந்து ரூ.10 குறைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்யின் விலை கடந்த வாரத்தில் மட்டுமே 10 சதவீதம் வரைக்கும் குறைக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 8) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்த விலைகுறைப்பை வாடிக்கையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த வாரத்திற்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் ஆகிய இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்யின் விலையும் ரூ.10 குறையவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பாமாயில், சோயாபீன், சன்பிளவர் எண்ணெய்யின் விலை குறைந்துவிட்டாலே மற்ற சமையல் எண்ணெய்யின் விலையும் குறைந்துவிடும். மேலும், ஒவ்வொரு நிறுவனங்களிலும் எண்ணெய் விலை மாறுபடுகிறது. இதனால், நாடு முழுவதும் ஒரே விலையில் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.