தனத்தின் பிறந்தநாளுக்கு சமையல் செய்வதாக சவால் விடும் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

0

தனத்தின் பிறந்தநாளுக்கு சமையல் செய்வதாக சவால் விடும் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

அடுத்த நாள் கொண்டாடப்பட இருக்கும் தனத்தின் பிறந்த நாளுக்காக பரிசு கொடுக்க முல்லை மற்றும் மீனா இருவரும் திட்டம் போடுகின்றனர். தொடர்ந்து மீனா தனி ஆளாக 15 பேருக்கு சமையல் செய்யப்போவதாக ஐஸ்வர்யாவிடம் சவால் விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையின் சிகிச்சைக்காக வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று ஜீவா சொல்கிறார். அப்போது, தனத்திடம் எதுவும் பணம் இருக்கிறதா என்று மூர்த்தி கேட்க அவர் பணம் இல்லை. அவசரமாக இருந்தால் நகையை தரவா என்று சொல்ல, வேண்டாம் என்று கூறி விட்டு மூவரும் கடைக்கு கிளம்புகிறார்கள். பிறகு, எதையோ தீவிரமாக யோசித்துக்  கொண்டிருக்கும் கண்ணனை முல்லையும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் மீனாவும் சேர்ந்துகொள்ள தனத்தின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்குவது குறித்து நால்வரும் பேசுகிறார்கள்.

விவாகரத்துக்காக கண்ணம்மாவிடம் பேரம் பேசும் பாரதி, கோர்ட்டில் இருந்து வரும் நோட்டிஸ் – இன்றைய எபிசோடு!

அப்போது தனத்திற்கு ஹாண்ட்பேக் வாங்கி கொடுப்பதாக முல்லை சொல்கிறார். மீனாவும் தன் பங்கிற்கு பட்டு சேலை வாங்கி கொடுப்பதாக கூறுகிறார். ஆனால், பணம் எதுவும் இல்லாததால் கை கொடுத்து வாழ்த்து சொல்ல இருப்பதாக ஐஸ்வர்யா பேசுகிறார். தொடர்ந்து தனத்திற்கு புடவை எடுக்க முல்லை மற்றும் மீனா இருவரும் கிளம்புகிறார்கள். மறுபக்கத்தில், கடையில் வைத்து ஆங்கிலத்தில் இருக்கும் மளிகை பொருட்களை திக்கி திணறி படித்து கொண்டிருக்கிறார் மூர்த்தி. அவரை கவனிக்கும் கதிர் மற்றும் ஜீவா இருவரும் பொருட்கள் மீது இருக்கும் பார் கோர்டு குறித்து சொல்லிக் கொடுக்கிறார்கள்.

தொடர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர் போன் அடிக்க, அந்த பணத்தை நாளைக்கு தந்து விடுவோம் என்று சொல்ல சொல்கிறார் மூர்த்தி. அப்போது, கடைக்கு வரும் ஜனார்த்தனன் தான் திருச்சிக்கு செல்வதாகவும் கடையை பார்த்துக்கொள்ள ஜீவாவை வர சொல்லி கூப்பிட அவரை அனுப்பி வைக்கிறார் மூர்த்தி. இப்போது தனத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மீனா, முல்லை, ஐஸ்வர்யா மூவரும் தங்களது குடும்பத்தாரை அழைக்கிறார்கள். அப்போது கொண்டாட்டத்திற்கு வருபவர்களுக்கு சாப்பாடு கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்று மீனா ஐடியா கொடுக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால், 15 பேர் தானே நாமே சமைத்து கொள்ளலாம் என்று முல்லையும், ஐஸ்வர்யாவும் கூறுகிறார்கள். இதோடு, மீனாவுக்கு சமைக்க தெரியாது என அவர்கள் கிண்டல் செய்ய நான் தான் தனம் அக்கா பிறந்தநாளைக்கு சமைக்க போகிறேன் என மீனா குண்டை தூக்கி போடுகிறார். கடைசியில், தனித்தனியாக சமைக்கலாம் யார் சமையல் நன்றாக இருக்கிறது என பார்க்கலாம் என மீனாவும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து சவால் விட்டு செல்கின்றனர். இதை கேட்டு அதிர்ச்சியடையும் தனத்திடம், இது தான் உங்கள் பிறந்தநாள் பரிசு என்று கூறுகிறார் முல்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!