கஷ்டத்தில் இருக்கும் பலரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி தேற்றி வருகிறது – வெங்கடேஷ் பட் நெகிழ்ச்சி!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகவே பலரும் கஷ்டத்தை மறந்து சிரித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் யார் யாரின் வாழ்க்கையெல்லாம் இந்த நிகழ்ச்சி மீட்டெடுத்துள்ளது என வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி:
பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து சிரிக்கவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கண்டு ரசித்து கொண்டிருக்கின்றனர். புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் ஆகியோர் கோமாளிகளாக அனைவரையும் மகிழ்வித்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் எந்த வேலை இருந்தாலும் கூட அதை தள்ளி வைத்துவிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மக்கள் பார்த்து வருகின்றனர். கோமாளிகளுடன் சேர்ந்து நடுவர்கள் போட்டியாளர்கள் என அனைவருமே ஜுலியாக என்ஜாய் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்த ரசிகர் ஒருவர் பகிர்ந்த செய்தியை வெங்கடேஷ் பட் கூறியுள்ளார். அதாவது ஒருவருக்கு 8 வருடங்களாகவே குழந்தை இல்லை.
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினியா இது? வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!
குழந்தை பிறக்காததை அறிந்து பலரும் மன கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். பின்பு இதற்கு தற்கொலை ஒன்றே முடிவு என அவர் நினைத்திருக்கிறார். இதன் பின்னர் எதேற்ச்சையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அவர் பார்த்திருக்கிறார். இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்து தற்போது அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பல நோயாளிகள், கஷ்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியால் நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதில் தனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என வெங்கடேஷ் பட் கூறும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.