குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் – ரசிகர்கள் ஷாக்!
ரசிகர்களின் பேவரைட் ரியாலிட்டி நிகழ்ச்சியாக விளங்கும் ஒரு ஷோ தான் குக் வித் கோமாளி. இதன் நான்காவது சீசனில் முதலில் யார் எலிமினேட் செய்யப்பட உள்ளார்கள் என இப்பதிவில் காண்போம்.
குக் வித் கோமாளி:
முற்றிலும் மாறுபட்ட ஒரு கான்செப்ட் உடன் கடந்த 3 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசனே ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற தற்போது இதன் நான்காவது சீசன் கடந்த இரண்டு வாரங்களாக டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. முந்தைய சீசன்களை போல இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காதலுக்காக குணசேகரனை மீறி விபரீத முடிவை எடுத்த ஆதிரை – எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு ஷாக் ட்விஸ்ட்!
Follow our Instagram for more Latest Updates
இதில் ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ அய்யப்பா, விஷால், காலயன், ஷெரின், விசித்திரா உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இதில் ஷிவாங்கி குக் ஆக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் வரும் வாரத்தில் யார் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதலாவதாக எலிமினேட் செய்யப்பட உள்ளார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த வாரம் ஷெரின், காலயன் மற்றும் கிஷோர் இவர்கள் மூவரில் ஒருவர் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற உள்ளார்கள். மேலும் முதல் எலிமினேஷனாக கிஷோர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் யார் இந்த சீசனில் முதல் எலிமினேஷன் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.