விஜய் டிவி ‘குக் வித் கோமாளி சீசன் 3’ ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – இவர் இல்லாமல் ஆரம்பமா?
விஜய் டிவி மெகா ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி அடுத்த சீசன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதில், மக்களின் மிகவும் விருப்பமான கோமாளி ஒருவர் இந்த முறை கலந்து கொள்ளவில்லை என்று முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குக் வித் கோமாளி:
விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பிருந்து சமையல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சமையல் நிகழ்ச்சி எந்த சேனலில் வந்தாலும் அவை ஹிட் தான் என்பது எழுதப்படாத விதி. ஆனால் அதையே இவர்கள் சற்று வித்தியாசமாக யோசித்து செயல்படுத்தினர். வெள்ளித்திரை, சின்னத்திரையில் நன்றாக சமைக்க தெரிந்த நட்சத்திரங்கள் சமையல் போட்டியாளராகவும், சமையலை பற்றி சுத்தமாக தெரியாதவர்கள் மற்றும் விஜய் டிவியின் காமெடி நாயகன்கள் கோமாளியாகவும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் முதன்முறையாக லாக்டவுனில் சிக்கி இருந்த போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ஆறுதலாக இருந்தது.
சன் டிவி “வானத்தை போல” சீரியலில் இருந்து விலகிய தமன் குமார் – ஸ்வேதாவை தொடர்ந்து அதிரடி முடிவு!
மிகவும் கலகலப்பாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்படும். தற்போது வெற்றிகரமாக 2 சீசன்களை கடந்து, 3வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது இந்த நிகழ்ச்சி. இரண்டு சீசன்களாக ஷிவாங்கி, மணிமேகலை, புகழ், பாலா ஆகிய 4 பேரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், சுனிதா, சகிலா, கனி, பாபா பாஸ்கர், அஷ்வின் போன்றவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளனர். நடுவர்களாக வெங்கடேஷ் பட், செஃப் தாமு இருவரும் இருந்து வருகிறார்கள். தமிழ் மக்களிடம் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் பெரிய அளவில் இருந்தது.
நடிகை சமந்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு இது தான் காரணம்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம்!
இதனால் 3 சீசன் எப்போது தொடங்கும் என்று மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்க தொடங்கினார்கள். இந்நிலையில் நேற்று வெற்றிகரமாக குக் வித் கோமாளி சீசன் 3 படப்பிடிப்புத் தொடங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாக அவர் நிகழ்ச்சியில் உள்ளார் என்பது உறுதியாகிறது. ஆனால் விஜய் டிவி புகழ் தற்போது பல திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதால் இந்த நிகழ்ச்சியில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.