“வாழ்ந்தா மன நிம்மதியோட வாழனும்” குக் வித் கோமாளி சுனிதா உருக்கமான பதிவு – ரசிகர்கள் ஷாக்!
சினிமாவில் நாம் பார்க்கும் போது பலர் சிரித்த முகத்துடன் இருந்தாலும் அவர்களுக்கு பின்னால் பல சோகங்கள் இருக்கிறது. அந்த வகையில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பலரை சிரிக்கவைக்கும் நடிகை சுனிதா தற்போது சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
குக் வித் கோமாளி சுனிதா:
விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமாகி தன்னுடைய கொஞ்சும் தமிழால் குக் வித் கோமாளி என்ற பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கியவர் தான் நடிகை சுனிதா. வட மாநில பெண்ணாக இருந்தாலும், அவர் தமிழ் பேச செய்யும் முயற்சிகள் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு வந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பதால் சுனிதாவிற்கு எந்த கஷ்டமும் இல்லை என அர்த்தமில்லை. மேலும் நகைச்சுவை நடிகர்கள் பலர் தங்களுடைய சோகங்களை மறைத்து கொண்டு தான் ஸ்கிரீனில் சிரித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சுனிதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்ந்தா மன நிம்மதியோட வாழனும் உங்களை விட எதுவும் முக்கியமில்லை என பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா, துர்காவிற்கு திருமணம் – அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
அவர் ஏன் இப்படி பதிவிட்டுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் சிரித்துக் கொண்டே அவரை பார்த்த ரசிகர்கள் தற்போது அவர் சோகமாக வெளியிட்ட அந்த பதிவில் ஆறுதல்களை சொல்லி பதிவிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே ஷிவாங்கியும் இது போல சோகமான பதிவை வெளியிட்டதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் எதாவது பிரச்சனையாக இருக்குமா என ரசிகர்கள் சந்தேகப்படுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை என ஷிவாங்கி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.