அடடா..தாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை…ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு!
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஆபரணத் தங்கத்தின் விலை சமீபமாக விலை உயர்வை அடைந்து வருகிறது. இந்நிலையில், நேற்றை விட இன்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.
ஆபரணத்தங்கத்தின் விலை:
தமிழர்கள் விழா காலம் வந்துவிட்டாலே தங்க நகைகளின் மீது தங்கள் கவனத்தை திருப்பி விடுகின்றனர். இதனால் பண்டிகை காலத்தில் தங்க நகைகளின் விற்பனை சாதாரண நாட்களை விட அதிக அளவில் உயர்ந்து விடுகிறது. தீபாவளி பண்டிகை இந்த மாதம் 24ம் தேதி வர உள்ளது. இதனால் தங்க நகை விற்பனை சந்தை இந்த மாதம் முழுவதும் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த மாதம் முதல் ஏற்ற இறக்கங்களை கண்டு வந்த தங்கத்தின் விலை தற்போது அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் விலை உயர்வை மட்டுமே அடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,705 ஆகவும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,133 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் அக்டோபர் 11 முதல் MBBS, BDS மருத்துவ கலந்தாய்வு – நவம்பர் 15 முதல் வகுப்புகள் தொடக்கம்!
Exams Daily Mobile App Download
ஆனால், இன்றைய காலை சந்தை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரூ.4,775 ஆகவும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.38,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,680 ஆகவும், 1 கிராம் ரூ.5,210 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அதிரடி நகை விலை உயர்வினால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்