சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சை கேள்வி – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

0
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சை கேள்வி - அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சை கேள்வி - அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சை கேள்வி – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

சேலம் பெரியார் பல்கலைக்கழக எம்.ஏ வரலாற்று தேர்வில் சாதி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சை கேள்வி குறித்து விசாரணை குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர பதிவாளர், நிரந்தர தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் நிரந்தர துறைத் தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் பொறுப்பு பதவிகளுக்கு மட்டும் நியமனம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்ட பருவத்தேர்வில் முதுகலை வரலாறு மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவு ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!

அதில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி யார்? என்று ஒரு மதிப்பெண் வினா கேட்கப்பட்டு இருந்தது. இது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே கடும் கோபத்தையும், அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த சர்ச்சைக்குரிய வினாத்தாளை தயாரித்த பேராசிரியர் குழு மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய நாடு கல்வி, கலை, விளையாட்டு துறை அமைச்சர் டேவிட் சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Exams Daily Mobile App Download

இந்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் உடன் நமது பல்கலைக்கழகங்கள் தொடர்பு படுத்தும் நிகழ்ச்சிகளில் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார். இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வின் சர்ச்சைக் கேள்வி குறித்து விசாரிக்க உயர் கல்வித்துறை இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வின் ஜாதி ரீதியான கேள்வி தொடர்பாக, விசாரணை குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!