மீண்டும் சர்ச்சைக்கு உள்ளான சீரியல் நடிகை ஸ்ரீநிதி – ரசிகர்கள் கொந்தளிப்பு!
சின்னத்திரை நடிகை ஸ்ரீ நிதி அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோவால் நெட்டிசன்கள் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்த செய்தியினை இப்பதிவில் காண்போம்.
சின்னத்திரை நடிகை:
வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளுக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது உள்ள டிஜிட்டல் உலகில் நாம் விரும்பும் நடிகர், நடிகைகள்,பிரபலங்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அதே போல் ஒரு சீரியலில் நடித்தாலே போதும் அல்லது டிக்டாக்கில் போடும் வீடியோ மூலம் எளிதில் பிரபலமடைந்து விடுகின்றனர். ஆனால் இன்றைய சூழலில் பிரபலமாக இருப்பதே மிகப்பெரிய பிரச்சனையாக மாறி விடுகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், சீரியலில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி. விஜய் டிவியில் அறிமுகமாகி பின்பு யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ஸ்ரீநிதி. இவர் அண்மையில் அஜித் நடித்து வெளியான வலிமை திரைப்படத்தை பற்றி கருத்தை பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி நடிகர் சிம்புவை காதலிப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். வலிமை படத்தில் ஸ்ரீநிதியுடன் சீரியலில் ஒன்றாக நடித்த சைத்ராவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மகனிடம் மன்னிப்பு கேட்கும் கோபி, தனித்து விடப்படும் பாக்கியா – சீரியலில் அடுத்த கட்ட கதைக்களம்!
இந்நிலையில், மீண்டும் வலிமை படம் சுமாரான படம் தான் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலாக, வலிமை படத்தை பற்றி ஏன் விமர்சித்தேன் என்றால் அது ஒரு படம் அதை பற்றி விமர்சிக்க யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார். இப்பவும் கேட்டாலும் வலிமை சுமாரான படம் தான், அது எனக்கு பிடித்த படம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் வலிமை படம் சமுதாயத்திற்கு தேவையான படம் தான் எனவும் கூறியுள்ளார். எதற்கு இப்படி வீடியோ போடுறீங்க என்று நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு, என்னை வீட்டில் வைத்து பூட்டி விட்டார்கள். தனிமையில் இருக்கிறேன் என்ன செய்ய என்று கூறியிருக்கிறார்.