மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன் & விக்கி ஜோடி – வைரலாகும் பதிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா, தன்னுடைய 7 வருட காதலுக்கு அர்த்தம் கொடுக்கும் விதமாக தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து பல சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்:
சினிமாவில் ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை சொந்தமாகியவர் நடிகை நயன்தாரா. அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். சில நாட்கள் காதலர்களாக இருந்த அவர்கள் ஒரு சில ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த அழகான உறவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்த ஜோடி தங்களுடைய திருமணத்தை ஜூன் 9 ஆம் தேதி கோலாகலமாக ஏற்பாடு செய்தனர்.
Exams Daily Mobile App Download
முதலில் திருப்பதியில் வைக்க திட்டமிட்ட நிலையில் பிரபலங்கள் வர முடியாத நிலை காரணமாக சென்னை மாமல்லபுரத்தில் வைக்க முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் வந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித், ஜெயம் ரவி என பலர் தங்களுடைய குடும்பத்துடன் வந்தனர். அதனால் சென்னை மாமல்லபுரம் கடற்கரையில் பாதுகாப்பு பணிகள் அதிகமாக்கப்பட்டன.
ராதிகா மீது போலீசில் புகார் கொடுத்த ராஜேஷ் – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
அதனால் பொது மக்கள் கடற்கரைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அதனை மீறி செல்லும் பயணிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால் கடற்கரை பொது இடம் அங்கே திருமணம் நடப்பதால் போக கூடாது என சொல்ல முடியாது. அதனால் இது மனித உரிமை மீறல் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே திருப்பதி கோவிலில் போட்டோஷூட் நடத்தியதால் திருப்பதி தேவஸ்தானம் கண்டனம் தெரிவித்து அதனால் விக்கி மன்னிப்பு கேட்டு சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.