தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு வந்த சோதனை – சர்ச்சை கருத்துகளுக்கு சாடல்!
இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா சமீபத்தில் வெளியிட்டிருந்த கருத்துக்கு உருவான சர்ச்சையை தொடர்ந்து, ‘உங்கள் பிரச்சாரத்துக்கு என்னை பயன்படுத்தாதீர்கள்’ என பாகிஸ்தான் வீரருக்கு ஆதரவாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவு
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு ஒரேயொரு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்து பெருமை சேர்த்தவர் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா. தனது வெற்றிக்கு பிறகு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்ட அவர், ஒலிம்பிக் அனுபவத்தை குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது ஒலிம்பிக் போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டி அதிகளவு தூரத்தை கடந்திருந்தத்தால், அது காணாமல் போயிருந்தது.
தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள், அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள்- அமைச்சர் அறிவிப்பு!
பின்னர் அந்த ஈட்டியை தேடிக்கொண்டிருந்த போது பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அதை வைத்திருந்ததாகவும், அந்த ஈட்டியை பெற்று பின் போட்டியின் மற்ற சுற்றில் அவர் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி தீயாக பரவ, ஒலிம்பிக் போட்டியில் ஒரு வீரரது ஈட்டியை எப்படி மற்ற வீரர் வைத்திருக்க முடியும் என கூறி பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு எதிராக பலரும் வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
TN Job “FB Group” Join Now
இதை கவனித்த நீரஜ் சோப்ரா பாகிஸ்தான் வீரருக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘உங்கள் பிரச்சாரத்தில் என்னையும், நான் கூறிய கருத்தையும் பயன்படுத்த வேண்டாம். விளையாட்டு, வீரர்களுக்குள் ஒற்றுமையை கற்றுக் கொடுத்துள்ளது. எனது கருத்துக்கு சிலர் தெரிவித்த பதில்களால் ஏமாற்றமடைந்துள்ளேன். ஒரு கருத்தை சொல்வதற்கு முன்பு, அந்த விளையாட்டை குறித்து அறிந்து கொள்வது முக்கியம்’ என குறிப்பிட்டுள்ளார்.