அரசு விடுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் அறிவிப்பு!
சென்னையில் உள்ள அரசு விடுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணிகளை பராமரிக்க தனியார் நிறுவனங்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒப்பந்த நிறுவனங்கள்:
அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட பணிகளை நிர்வகிக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் ஒப்படைக்கப்படும். அந்த வகையில், அரசு விடுதிகளில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அவர்கள் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு – அக்.8 கடைசி நாள்!
அதன்படி, சென்னை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என்று தனியாக அரசு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த 17 விடுதிகளுக்கு 17 தொகுப்பூதிய பணியாளர்களுக்கான காலியிடங்கள் உள்ளது. அதில், 5 ஆண்கள்மற்றும் 12 பெண்கள் ஆகும். இந்த விடுதிகளை அனைத்து நாட்களிலும் தூய்மையாக பராமரிக்க தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்.11 வரை இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
இந்த பணிக்கும் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் நல்ல நடத்தை உடையவராகவும், உரிய உடல் தகுதி உடையவராகவும் இருக்க வேண்டும். மேலும், பணியாளர்கள் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ஒப்பந்த பணிக்கு விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.