மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து தொடர்ந்து அழுத்தம் – மதுரை எம்.பி. வெங்கடேசன்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் மற்றும் நடவடிக்கை பணிகள் குறித்து மதித்த அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு அழுத்தம்:
மதுரையில் தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியிட்டு பல ஆண்டுகள் ஆன பின்னரும் கூட பணிகள் முழு வேகத்தில் இன்னும் தொடங்கவில்லை. இதனால் அரசியல் ரீதியாக மட்டுமின்றி பொதுமக்கள் தரப்பிலும் பல புகார்கள் மற்றும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
கீழடி அகழ்வாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
அதில், மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விரைவாக தமிழகம் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை இடமாற்றம் செய்யக் கூடிய பிரச்னை மட்டும் அல்ல. அங்கு அந்த கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வுகள் செய்வதற்கு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் கல்வெட்டு குறித்து படிக்க கூடிய மாணவர்கள் அந்த கல்வெட்டுகளை எளிதில் அணுக இயலவில்லை. மக்கள் அந்த கல்வெட்டில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.
TN Job “FB Group” Join Now
மேலும், அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு வகை மாற்றம் செய்வதற்கு ஒன்றே முக்கால் ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். அரசின் மெத்தனப் போக்கின் விளைவாக தான் கால தாமதம் நடந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒவ்வொரு பணியையும் தொடர்ச்சியாக கண்காணித்து அதற்கான அழுத்தத்தை கொடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.