தமிழக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது திங்கட்கிழமை வருவதால் அரசு அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றிக்கு மறுநாளும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியனவற்றை பார்ப்போம்.
தீபாவளி
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது வருகிற திங்கட்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். இதனால் பொது போக்குவரத்துகளான பேருந்து மற்றும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் தீபாவளி பாண்டிக்கு அரசு சார்பாக திங்கட்கிழமை மட்டுமே விடுமுறை அளித்துள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தங்களின் சொந்த ஊரிலிருந்து தீபாவளி அன்றே கிளம்ப வேண்டியிருக்கும்.
Follow our Instagram for more Latest Updates
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதனால் தங்களுக்கு தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதே போல் அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுமுறை அளித்தால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அளிப்பதுடன் அரசு ஊழியர்களுக்கும் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையானது அத்தியாவசியமானதா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் இது தொடர்பான அறிவிப்பானது எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.