தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்களுக்கான கலந்தாய்வு – நாளை (செப். 27) முதல் தொடக்கம்!

0
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்களுக்கான கலந்தாய்வு - நாளை (செப். 27) முதல் தொடக்கம்!
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்களுக்கான கலந்தாய்வு - நாளை (செப். 27) முதல் தொடக்கம்!
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்களுக்கான கலந்தாய்வு – நாளை (செப். 27) முதல் தொடக்கம்!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை மாறுதல் செய்ய, நாளை (செப். 27) கலந்தாய்வு நடைபெற இருப்பதாக, பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

பணி மாறுதல் கலந்தாய்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கு, ஆண்டுதோறும் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அது குறித்து ஏகப்பட்ட புகார்கள் வந்தது. அதனால் பணிமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை ( செப். 27) பள்ளிக் கல்வித் துறையில் ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை மாறுதல் செய்ய கலந்தாய்வு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் இந்த கலந்தாய்வில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் எனவும், அனைத்து அலுவலகங்களும் எந்தவித புகாரும் இன்றி செயல்பட வேண்டும் எனவும், கடந்த ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி, பள்ளிக்கல்வித்துறை அலுவலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

முடிவுக்கு வரும் WFH வேலை முறை ..பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – ஊழியர்கள் ஷாக்!

அது மட்டுமில்லாமல் நிதிக் காப்பாளர், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் மாவட்டம் உள்ளேயே மாறுதல் பெற நாளை (செப். 27) கலந்தாய்வும், நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற செப். 28ம் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு ஊழியர்களின் பதவி உயர்விற்கான கலந்தாய்வு செப். 29 தேதி நடைபெற இருப்பதாகவும், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வும் செப். 29 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கலந்தாய்வின் படி ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் மற்ற அலுவலகங்களுக்கு மாற வேண்டும் எனவும், பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில், கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!