தமிழக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு – உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு - உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு - உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு – உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஜூன் 20ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று கலந்தாய்வு தொடங்கி உள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. மற்ற படிப்புகளை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று. கடந்த ஜூன் 20ம் தேதி முதல் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு விண்ணப்பபதிவு தொடங்கப்பட்ட முதல் நாளே சுமார் 18,000 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 25ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்பட இருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் காலதாமதம் ஆனதால் கலந்தாய்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியானதை அடுத்து இன்று பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி வரைக்கும் அதிகனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

மேலும் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்றும் இதில் கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் தேர்வு செய்ததில் இருந்து 1 வாரத்திற்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரிகளில் சேர வேண்டும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் வீணாவதை தடுக்கும் வகையில் கலந்தாய்வு நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இன்று தொடங்கி உள்ள பொதுப்பிரிவு கலந்தாய்வில் 2,700 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர ஆர்வத்துடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!