தமிழக இளங்கலை கலை & அறிவியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு – அறிக்கை வெளியீடு!

0
தமிழக இளங்கலை கலை & அறிவியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு - அறிக்கை வெளியீடு!
தமிழக இளங்கலை கலை & அறிவியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு - அறிக்கை வெளியீடு!
தமிழக இளங்கலை கலை & அறிவியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு – அறிக்கை வெளியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் கலை, அறிவியல் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான முழு அறிவிப்பையும் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கலந்தாய்வு:

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்பைக் காட்டிலும் கலை, அறிவியல் படிப்புகளில் தான் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகள் அனைத்திலும் மொத்தமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ஆனால், இந்தாண்டு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் கலந்தாய்வு குறித்தான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு ஆண்களுக்கு இன்று காலை 10.30 மணி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், பெண்களுக்கு நாளை காலை 10.30 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பாடத்திட்டத்திற்கு தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மீதமுள்ள பாடங்களில் 300-400 மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் – மத்திய அரசு அனுமதி!

மேலும், வரலாறு, வணிகவியல், வணிக வேளாண்மையியல், பொருளியல் ஆகிய பாடங்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரலாறு, வணிகவியல், வணிக வேளாண்மையியல், பொருளியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. மேலும், இந்த கலந்தாய்வில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மீதமுள்ள பாடங்களில் 250 – 400 எடுத்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும், பி.ஏ தமிழ் மற்றும் பி.ஏ ஆங்கிலம் பாடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கலந்தாய்விற்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கு மீதமுள்ள பாடங்கள் தான் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட மாணவர் கலந்தாய்வு நடத்தப்பட்ட நாளிலேயே பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வந்து முழு கல்லூரி கட்டணத்தையும் செலுத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வில் கலந்துகொள்ளும் போது மாணவர் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் பதிவு செய்த விண்ணப்ப படிவம், அசல் மாற்று சான்றிதழ், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்று, 4 பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!