36 மாதங்களுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் – நீதிமன்றம் நம்பிக்கை!
மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் மத்திய அரசு முழுமையாக முடிக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வந்தார். தென் மாவட்டங்களில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகள் தோப்பூரில் எய்ம்ஸ் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு எய்ம்ஸ் திட்டத்தை நிறைவேற்றாமல் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர்.
கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு? வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை!
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கே.கே.ரமேஷ் கூறியிருந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கையை தொடங்க வலியுறுத்தி பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணையில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
அப்போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பின்னர் பிற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கி ஏறத்தாழ முடியும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் பணிகள் நடைபெற்றதாக தெரியவில்லை என்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் நீதிமன்றத்தை நாடுவதாக தெரிகிறது என்றும் நீதிபதி கூறினார். மேலும் 36 மாதங்களுக்குள்ளாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.