மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தங்கும் விடுதி கட்டும் பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயில் சார்பாக பக்தர்கள் தங்க விடுதிகள் அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தங்கும் விடுதி:
மதுரையில் அமைத்துள்ள உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமமல்ல பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டவர்களும் கோயிலுக்கு வருவர். சிறந்த சுற்றுலா தலமாகவும் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க ஏதுவாக தங்கும் விடுதி கட்ட முடிவு செய்யப்பட்டது. ரூ.35 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி கட்டப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன் படி தற்போது மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான மதுரை எல்லீஸ் நகரில் உள்ள இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் தக்கார் கூறியுள்ளார்.
தமிழக விவசாயிகள் கவனத்திற்கு – பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து கோயில் உற்சவம் மற்றும் திருவிழாகளை பொதுமக்கள் கண்டு கழிக்க ஏதுவாக புது மண்டபத்தில் உள்ள கடைகள் அகற்றப்பட்டு எல்.இ.டி. டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு சொந்தமான மதுரை செல்லூர் இடத்தில் ரூ.2.37 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றும் தக்கார் கூறியுள்ளார். தற்போது கோயில்களுக்கான மதிப்பீடுகள், முன்மொழிவுகள் அனைத்தும் நேரடியாக ஆணையர் அங்கீகாரத்திற்கு அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.