தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் விலை புதிய உச்சம் – ஓபிஎஸ் கண்டனம்!!
தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் சிமெண்ட், ஜல்லி போன்றவற்றின் விலை கடும் உச்சம் கண்டுள்ள நிலையில், இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கட்டுமான பணி:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காலத்தில் விலைவாசி கடும் உச்சம் கண்டுள்ளது. அந்த வகையில் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் சிமெண்ட் விலை ரூ.520 ஆகவும், எம் சாண்ட் ஒரு யூனிட் ரூ.6000 ஆகவும், ஒரு அங்குல ஜல்லி ரூ.3,900 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லி ரூ.4,100 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களின் விலை கடந்த சில நாட்களில் மட்டும் 30 முதல் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக கட்டுமான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் இ-பாஸ் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – தேவையான ஆவணங்கள்!
அதேபோல் கட்டுமான பணிகளுக்கான ஸ்டீல் கம்பி ஒரு டன் ரூ.68 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் கொரோனா நோய்பரவல் காலத்தில் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பதால் அது தொடர்பான பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக பொறியாளர்கள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர். மேலும் இதன் விலை அனைத்தும் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும், தமிழக மக்கள் மத்தியில் இந்த விலை உயர்வு செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் பரவுகிறது. எனவே இது குறித்து தமிழக அரசு விரைந்து செயல்பட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.