தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்தது அதிகரித்து வருகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம்:
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் தங்கள் வேலைகளை இழந்து வருமானம் இன்றி சிரமப்படுகின்றனர். கட்டிட பணிகள் நடைபெறாததால் கட்டுமான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். நடுத்தர ஏழை, எளிய மக்களில் பெரும்பாலானோர் கட்டுமான தொழிலாளர்களாக உள்ளனர். கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்களுக்கும் வேலை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பழைய 2 ரூபாய் நாணயத்திற்கு ரூ.5 லட்சம் பெறலாம் – முழு விவரம் இதோ!
இதற்கிடையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சிமெண்ட் மூட்டையின் விலை ரூபாய் 520 ஆக உள்ளது. சில்லறை விற்பனையில் 410 ரூபாய் முதல் 430 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது விலையேற்றம் காரணமாக ரூ.470 – 520 ஆக உள்ளது. இரும்பு கம்பி ஒரு கிலோ ரூ.60லிருந்து ரூ.70 – 75 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. எம்-சாண்ட் ஒரு யூனிட் 3600 ரூபாயிலிருந்து 4000 ஆக அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
வி-சாண்ட் ஒரு யூனிட் 4600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது 5100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 23 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஒரு லோடு செங்கல் 28 ஆயிரம் ரூபாயாகவும், 3 யூனிட் கருங்கல் ஜல்லி ரூ.8500 லிருந்து ரூ.9500 ஆகவும் அதிகரித்து விட்டன. இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே கட்டுமான பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.