மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் – காங்கிரஸ் எம்.பி அறிக்கை!!
மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் ஒருபோதும் மக்களுக்கு உதவியாக இருக்காது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தனியார்மயமாக்கல் திட்டம்:
மத்திய அரசு நிதி பற்றாக்குறையை தவிர்க்க தனியார்மயமாக்கல் திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கவும், மக்கள் நலத் திட்ட செலவுகளை சமாளிக்கவும் இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் போக்குவரத்து சேவை தொடக்கம்? – முதல்வர் முக்கிய அறிவிப்பு!!
பங்குகள் விற்பனை மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கையால் வேலைவாய்ப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் அஞ்சுகின்றனர். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில், மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது எனவும், தனியார்மயமாக்கல் திட்டம் மூலமாக மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டில் தனியார்மயமாக்கப்பட நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.