TNPSC குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி – தேர்வர்கள் அதிர்ச்சி!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு முடிவு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான எழுத்து தேர்வானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – வெளியான அறிவிப்பு!
இந்த தேர்வின் மூலம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், வாரலாறு காணாத வகையில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள், 7 மாதங்களுக்கு பிறகு நேற்று வெளியானது. பல லட்சம் பேர் எதிர்பார்ப்புகளில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதாவது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தரவரிசையில் குறைந்த ரேங்கிலும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தரவரிசையில் முன்னணியிலும் உள்ளனர். இதனால் தேர்வர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். நீண்ட நாட்கள் காத்திருந்த தேர்வர்களுக்கு, தேர்வாணையத்தின் மதிப்பீட்டில் ஏற்பட்ட குளறுபடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.