TNPSC குரூப்-1 தேர்வு இறுதி பட்டியலில் குளறுபடி? அதிர்ச்சியில் தேர்வர்கள்!

0
TNPSC குரூப்-1 தேர்வு இறுதி பட்டியலில் குளறுபடி? அதிர்ச்சியில் தேர்வர்கள்!
TNPSC குரூப்-1 தேர்வு இறுதி பட்டியலில் குளறுபடி? அதிர்ச்சியில் தேர்வர்கள்!TNPSC குரூப்-1 தேர்வு இறுதி பட்டியலில் குளறுபடி? அதிர்ச்சியில் தேர்வர்கள்!
TNPSC குரூப்-1 தேர்வு இறுதி பட்டியலில் குளறுபடி? அதிர்ச்சியில் தேர்வர்கள்!

தமிழகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வின் இறுதி பட்டியல் அண்மையில் வெளியானது. இத்தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேருபவர்கள் சுமார் 10 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் பணிக்குப் பதவி உயர்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த குரூப்-1 தேர்வு இறுதி பட்டியலில் குளறுபடி நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

குரூப்-1 தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 வரையிலான தேர்வுகளும், மேலும் துறை சார்ந்த பிற பணியிடங்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டது. இந்த வகையில் உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதாவது குரூப் 1 தேர்வு என்பது TNPSC நடத்தும் தேர்வுகளில் உயர் பதவிகளுக்கான தேர்வாகும்.

இந்த தேர்வு மூலம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். சமீபத்தில் வெளியான குரூப் 1 தேர்வின் இறுதி முடிவுகள் அடிப்படையில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மொத்தம் உள்ள 66 பணியிடங்களில் 57 இடங்களில் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கிட்டத்தட்ட 87 % சதவீதம் தேர்ச்சி ஆகும். அதாவது அரசுப் பணிகளில் பெண்கள் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசுப் பணிகளில் 30% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்? முக்கிய அறிவிப்பு

Exams Daily Mobile App Download

ஆனால் சமீபகாலமாக, பெண்கள் இந்த இடஒதுக்கீட்டையும் தாண்டி, பொது பிரிவிலும் தேர்வாகி வருகின்றனர். அந்த வகையில் குரூப் 1 தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, பெண்களுக்கான 30% இட ஒதுக்கீட்டின் படி மொத்தம் 66 பணியிடங்களில் 20 இடங்கள் பெண்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வரும். மீதம் உள்ள 46 பணியிடங்கள் பொதுப் போட்டியில் நிரப்பப்பட்டவை. இவற்றிலும் 37 இடங்களைக் பெண்கள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் குரூப்-1 தேர்வில் 87 விழுக்காடு பணிகள் பெண்களுக்கு சென்றது எப்படி? என குரூப்-1 தேர்வு எழுதிய ஆண் தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் கொடுக்க வேண்டும் என குரூப்-1 தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் இட ஒதுக்கீடு முறையில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்தும் தேர்வாணையம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!