குடிமைப்பணி தேர்வுக்கான கட்டணத்தில் குழப்பம் – TNPSC விளக்கம்!
தமிழகத்தில் குடிமைப்பணித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடிமைப்பணி முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்டணத்தில் பிழை இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தேர்வு கட்டணம்:
மத்திய அரசுப் பணியாளர் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் குடிமைப்பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு 21.05.2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் 8.11.2022 ஆம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வு எழுத இருப்பவர்களுக்கு தேர்வு கட்டணமாக ரூ. 150 க்கு பதிலாக ரூ. 200 என தவறாக குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே முதன்மை தேர்வுக்கு தேர்வானவர்கள் தேர்வு கட்டணமாக ரூ. 150 செலுத்தினால் போதுமானது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
NEET UG 2022 கவுன்சிலிங் இட ஒதுக்கீடு முடிவுகள் – MCC இன்று வெளியீடு!
Exams Daily Mobile App Download
தேர்வு கட்டணம் குறித்து தேர்வர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில் தற்போது TNPSC வெளியிட்ட இந்த அறிவிப்பால் தேர்வர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குடிமைப்பணி முதன்மை தேர்வு 2023 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற இருப்பதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.