தமிழக அரசு பள்ளிகளில் 13000+ தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் – வலுக்கும் கண்டனம்!
அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என அரசு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அதற்கு பல்வேறு கண்டனம் வந்தபடி இருக்கிறது.
தற்காலிக ஆசிரியர்கள்:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் அரசு பள்ளிகளில் மட்டுமே மொத்தமாக 13,300 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படாமலே உள்ளது. அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்வதற்கு கால தாமதமாகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிகமாக ஆசிரியர்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வித் திறன் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு அரசு இத்தகைய முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள் – மத்திய அரசு அறிவிப்பு!
இந்நிலையில் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமனம் செய்யும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என சீமான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். அதாவது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை பணியமர்த்தும் வரைக்கும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்தால் அதில் ஆட்சி அதிகாரத்தில் பல ஊழல் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக அரசு முடிவெடுத்துள்ளதாக தற்காலிக ஆசிரியர் பணி என்கிற முடிவை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.