ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை குறித்து கவலை – 21 நாடுகள் இணைந்து கூட்டறிக்கை!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை குறித்து கவலை கொள்வதாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 21 நாடுகள் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கூட்டறிக்கை:
தலிபான்களின் ஆட்சி நடந்த 1996 முதல் 2001 காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பல சட்டங்களையும் தடைகளையும் கொண்டு வந்தனர். அதன்படி, பெண்கள் முழுமையான பர்தா அணியாமல் வெளியில் செல்லக் கூடாது, உரிய ஆண் துணையின்றி வெளியில் செல்லக் கூடாது, 8 வயதிற்கு மேல் கல்வி கற்க கூடாது. மேலும், அவர்கள் நடக்கும் சத்தம் கூட கேட்கக் கூடாது என்பது போன்ற பல கொடுமையான சட்டங்களை கொண்டு வந்தனர். இந்த சட்டங்களை மீறும் பெண்களுக்கு பொது வெளியில் வைத்து மிக கொடுமையான முறையில் தண்டனைகள் விதிக்கப்படும்.
சூப்பர் அம்சங்களுடன் OnePlus 9 மொபைல் – சலுகை விவரம்!
இது போன்ற கருத்துகளினால் தலிபான்களின் ஆட்சியை மக்கள் வெறுத்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் தலிபான்கள் ஆக்கிரமித்து, தலைநகர் காபூலையும் கைப்பற்றி உள்ளனர். இதனால் தலிபான்களின் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாத மக்கள் பல நாடுகளுக்கும் சென்று தஞ்சம் புகும் நிலை வந்துள்ளது. அனைத்து நாடுகளும் ஆப்கானில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை மூடியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உட்பட 21 நாடுகள் இணைந்து கூட்டாக ஆப்கான் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை குறித்து மிகவும் கவலை கொள்கிறோம். ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மனிதாபிமான எண்ணத்தில் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். அங்குள்ளவர்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை எதிர்கால அரசு அணுகுவதை நாங்கள் கண்காணிக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.