தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அறிவிப்பு வெளியிடுவாரா முதல்வர்?
தமிழகத்தில் கணினி பாடத்தை அரசு பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு வழிவகை செய்ய முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும் அவர்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேறுவரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆசிரியர்கள் கோரிக்கை:
தமிழ்நாட்டில் பட்ஜெட் வருகின்ற மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்ற இருப்பதாகவும் மேலும், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, தொழில் துறையினருக்கு என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி துறையின் மானியக் கோரிக்கையின் போது, புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதால் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
TNPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி!
இந்நிலையில் தொடக்க கல்வியில் கணினி அறிவியல் பாடத் திட்டத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும், அடிப்படை ஊதியத்தில் பி.எட் பயின்ற கணினி அறிவியல் ஆசிரியர்களை மாற்ற வேண்டும் என்று கணினி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்த போது, கணினி அறிவியல் பாடத்திட்டத்தை அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தி அசத்தினார். அதன்பின் வந்த அதிமுக ஆட்சி கணினி அறிவியல் கல்வி திட்டத்தை முடக்கி வைத்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய கணினி கல்வி கிடைக்காமல் பள்ளி படிப்பை முடித்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி, மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அரசு அவர்களின் கோரிக்கையை புறக்கணித்து வந்தது.
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கட்டுப்பாடுகளின்றி தரிசனத்திற்கு அனுமதி!
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது, அவர் இந்த விஷயத்தில் அமைதி காப்பது நல்லது என்று கூறியுள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் நலன் கருதி தொடக்க கல்வியில் கணினி கல்வி அறிமுகம் செய்ய வேண்டும், இது சார்ந்து இருக்கும் கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும். இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பாக வெளியிட்டு, அதனை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.