தமிழகத்தில் மின்சார கட்டணம் குறித்த புகார்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மின்சார கட்டணம் தொடர்பான புகார்களை மின் நுகர்வோருக்கான சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு அளிக்கலாம் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் கட்டண புகார்கள்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்காளாக மின்சாரம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. 9 மாதங்களாக மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்படாமல் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் எண்ணூர் அனல்மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 20) அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மின்சார வாரியத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள் சரி செய்ய உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி மோசடிகளைத் தவிர்க்க வழிமுறைகள் வெளியீடு!
மேலும் நிர்வாகத்திற்கு சீர்கேடு ஏற்படுத்திய யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. மின்வாரியத்தில் நன்றாக உழைக்கக்கூடிய அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் அவர்களின் உழைப்பு வீணாக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால் இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி இழப்புக்கு மின்வாரியம் வட்டி செலுத்தி வருகிறது. பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் மின்கட்டணம் சரியான முறையில் பயன்படுத்தப்படும். இதுவரை பெரிய தவறுகள் நடந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது மோசமான நிர்வாகத்திடம் இருந்து மின்வாரியம் மீட்டெடுத்து வெளிப்படையான நிர்வாகத்தை மின்வாரியம் முன்னெடுக்கும். 3,000 மில்லியன் யூனிட் பயன்படுத்தி, மின்வாரியத்துக்கு செலுத்திய கட்டணத்தை விட 4,400 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டு, கூடுதலாக ரூ.80 கோடி தான் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிக்காமல் இருக்க வேண்டும்.
எனவே கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்க வேண்டாம் என முதல்வர் உத்தரவின் படி இந்த ஆண்டு அந்த தொகை வசூலிக்கப்படவில்லை. மேலும் மின்சார கட்டணம் தொடர்பான ஏதாவது புகார்கள் இருப்பின் 94987 94987 என்ற மின் நுகர்வோருக்கான சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு அளிக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.