தமிழகத்தில் மின் மீட்டர்கள் குறித்த புகார்.. தனியார் ஆய்வகங்கள் மூலம் சோதனை – மின்சார வாரியம் அறிக்கை!

0
தமிழகத்தில் மின் மீட்டர்கள் குறித்த புகார்.. தனியார் ஆய்வகங்கள் மூலம் சோதனை - மின்சார வாரியம் அறிக்கை!
தமிழகத்தில் மின் மீட்டர்கள் குறித்த புகார்.. தனியார் ஆய்வகங்கள் மூலம் சோதனை - மின்சார வாரியம் அறிக்கை!
தமிழகத்தில் மின் மீட்டர்கள் குறித்த புகார்.. தனியார் ஆய்வகங்கள் மூலம் சோதனை – மின்சார வாரியம் அறிக்கை!

தமிழகத்தில் மின்சாரத் துறை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் மீட்டர்கள் பழுது அடைந்தால் அதனை பரிசோதிக்க தனியார் ஆய்வகங்கள் குறித்த பட்டியலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

மின்சார வாரியம் வெளியீடு:

தமிழகத்தில் மின்சாரத் துறையின் கீழ் மின் இணைப்பு பெற்றுள்ள வீடு, தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் பழுதான மின் மீட்டர்களை உபயோகப்படுத்தியதன் காரணமாக அதிகமாக மின்சார கட்டணம் வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அதிகமான மின் அழுத்தம் காரணமாக மின் மீட்டர் எரிவது உள்ளிட்ட பிரச்சனைகள் தினமும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பிரச்சனைகளை மின்வாரியமே பரிசோதனை செய்து சரி செய்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் பல கோடி மின் இணைப்புகள் உள்ள தமிழகத்தில் மின்வாரிய பரிசோதனை கூடத்தில் மட்டுமே குறிப்பிட்ட கால கெடுவிற்குள் மின் மீட்டர்களை பரிசோதனை செய்து, அந்தந்த கோட்டத்துக்கு அனுப்பி வைப்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது. அதனால் பொதுமக்களின் பிரச்சனைகள் சரியான நேரத்தில் சரி செய்து கொடுக்கவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கடந்த 2 ஆம் தேதி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் தனியார் ஆய்வகங்கள் எது, அவை எங்கே இருக்கிறது, அதில் எந்தெந்த ஆய்வகத்திற்கு லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களின் கவனத்திற்கு.. டிச.8 ‘இங்கெல்லாம்’ மின்தடை – முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

பொதுமக்கள் தங்களது தேவைகளின் அடிப்படையில் தனியார் ஆய்வகங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு பொதுமக்கள் தங்கள் மின் மீட்டரை கொண்டு சென்று ஆய்வு செய்து, பழுது நீக்கிக் கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அதற்கான செலவீனங்களை பொதுமக்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!