அரசு அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் புகார் – தீர்வு கிடைக்குமா? உண்மை நிலவரம்!
நேரடியாக அரசு அலுவலகங்களில் சென்று புகார் தெரிவிக்கும் போது அந்தப் புகார் ஏற்கப்படாமலும் போகலாம். அந்தப் புகார் ஏற்கப்பட்டால் கூட சில சமயங்களில் அந்தப் புகாருக்கான தீர்வுக்கு எந்தக் காலக் கெடுவும் இருக்காது. ஆனால் அதுவே ஆன்லைன் மூலம் புகார் பதிவிடும் போது புகார் தெரிவிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் பதிவாகிவிடும். இதனால் விரைவில் தீர்வு கிடைத்துவிடும்.
ஆன்லைன் மூலம் புகார்:
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, தற்போதைய தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மின்வாரியதுறை, மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மின்வாரிய துறை சிறப்பாக செயல்படுகிறது என்பதை உறுதி செய்ய, ஒரு உண்மை சம்பவம் குறித்து பார்க்கலாம். சென்னையில் வசித்து வந்த x என்ற நபருக்கு, திருச்சியில் சொந்தமாக வீடு உள்ளது.
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? சிறப்பான பயிற்சி வகுப்புகள்!
அந்த வீட்டின் மின் கட்டணம் வசூலிக்கப்படும் முறையில் தவறு இருப்பதாக அவர் கருதினார். இந்த தவறை சரி செய்ய உடனடியாக, அவரால் திருச்சிக்கு செல்ல முடியாது. அந்த நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் மின்சார வாரியத்தின் tangedco.gov.in இணையதளத்தில் தனது புகாரை பதிவிட்டார். இருப்பினும் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலக ஊழியர்கள், இந்த புகாரை பார்த்து நடவடிக்கை எடுப்பார்களாக என்ற சந்தேகத்தில் தான் அவர் புகாரை பதிவிட்டார்.
இருப்பினும் அவருக்கு மதியம் ஒரு மணி அளவில் திருச்சி சீனிவாச நகர் மின் வாரியத்தில் பணிபுரியும் மின் ஊழியர் மகாதேவன் என்பவரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்தப் புகார் குறித்து கேட்டறிந்த மின் ஊழியர் உடனடியாக அந்த புகாரை தீர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார். இதன் மூலம் இரண்டு நிமிடத்தில் x நபரின் புகாருக்கு தீர்வு கிடைத்தது. இதனால் x நபருக்கு அதிக ஆச்சரியம் ஏற்பட்டது, ஏனென்றால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் 3 மணி நேரத்தில் தீர்வு கிடைத்து உள்ளது. சில அரசு அலுவலகங்களில் கொடுக்கப்படும் புகார்களுக்கு தாமதமாக தான் தீர்வு கிடைக்கும்.
Exams Daily Mobile App Download
இருப்பினும் ஆன்லைன் முறையில் கொடுக்கப்பட்ட புகாருக்கு விரைவில் தீர்வு கிடைத்து உள்ளது, இதற்கு காரணம் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இதுபோன்ற பதியப்பட்ட புகார்களை முடித்து வைக்க காலக்கெடு வைத்துள்ளனர். அந்தக் காலக் கெடுவுக்குள் புகாரினை அரசு ஊழியர் முடித்து வைக்க நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆன்லைன் நடைமுறை வந்த பிறகு நமது நாட்டில் அரசு அலுவலகத்தில் கூட்டம் சேர்வது குறைந்து உள்ளது.