மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டித் தேர்வு வழிமுறைகள் – மத்திய அரசுக்கு உத்தரவு!!
அரசுப்பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக முன்வைக்கப்படும் நிலையில், அவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
போட்டித்தேர்வு வழிமுறைகள்:
மத்திய அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சில சலுகைகள் அளிக்கப்படும் போதிலும், தனியாக வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் மாற்றுத்திறனானிகளின் அரசுப்பணி எனும் கனவு நிறைவேறாமலே போகிறது. மேலும் யுஜிசி 2019ம் ஆண்டு வெளியிட்ட புதிய விதிகளின் படி, மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்கு செல்லும் போது, ஒரு சொந்த உதவியாளரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னர் கண் தெரியாத மற்றும் எழுத முடியாத அளவிற்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நடத்தும் பல்கலை சார்பில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். மேலும் பட்டப்படிப்பு தகுதி உள்ள தேர்வெழுதும், மாற்றுத்திறனாளிக்கு 10ம் வகுப்பு படித்த உதவியாளர் நியமனம் செய்யப்பட்டனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் கூறும் விடைகளை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுவதால், அவர்களால் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற முடிவதில்லை.
TNUSRB போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவாதம்!!
எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தனி வழிகாட்டுதல்களை வகுக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பெற மறுக்கக் கூடாது. அவர்களுக்கான வழிகாட்டுதல்களை 3 மாதத்திற்குள் உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்