பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசுடன் போட்டிகள் – முழு விபரம் இதோ!

1
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசுடன் போட்டிகள் - முழு விபரம் இதோ!
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசுடன் போட்டிகள் - முழு விபரம் இதோ!
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசுடன் போட்டிகள் – முழு விபரம் இதோ!

மத்திய கல்வித்துறையின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி மற்றும் விபா நிறுவனம் மற்றும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் இணைந்து நடத்தும் ஆசிரியர்களுக்கான போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான போட்டிகள்:

ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த தேசிய அளவிலான அறிவியல் திறனறி ‘ விஞ்ஞான் மந்தன் தேர்வு’ இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், மத்திய கல்வித் துறையின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி மற்றும் விபா நிறுவனம் இணைந்து நடத்துகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான இணையவழி கருத்தரங்கம், வீடியோ மற்றும் கதை, கவிதை, கட்டுரை, கருத்து வரைபடம் போட்டியை அறிவித்துள்ளது.

முத்துராசு கொலையின் முக்கிய ஆதாரத்தினை காட்டி மாயனை மிரட்டும் மாசாணி – இன்றைய எபிசோட்!

பள்ளி ஆசிரியர்களிடையே உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுவதற்காக ‘ஆகார்கிராந்தி’ என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த கருத்தரங்கு மற்றும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 1 ஆம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கலந்து கொள்ளலாம். இந்த கருத்தரங்கு ஆன்லைன் மூலமாக ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 23 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும்.

இவ்வாறு மொத்தமாக ஐந்து கருத்தரங்குகள் நடைபெறும். இதில் உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள், அதில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும்.

போட்டிகளுக்கான தலைப்புக்கள்:

  • உள்ளூர் பழங்கள், காய்கறிகள், சரிவிகித உணவு, இயற்கையான ஊட்டச்சத்துள்ள பொருட்கள், பாரம்பரிய உணவுகள், பாதுகாக்கப்பட்ட உணவு முறைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று முதல் ஐந்து நிமிட வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்.
  • வீடியோ அனுப்ப வசதி இல்லாதவர்கள் கதை, கவிதை, கட்டுரை கருத்து வரைபடம், ஓவியம், ஆகிய ஏதாவது ஒரு முறையில் தங்களின் படைப்புகளை மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் அனுப்பலாம்.

TN Job “FB  Group” Join Now

  • வீடியோக்கள் மற்றும் கதை, கவிதை, கட்டுரை ஆகியவற்றைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எடுத்து அல்லது எழுதி அனுப்பலாம்.
  • இந்த வீடீயோக்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை தூண்டுவதாக இருக்க வேண்டும்.
  • தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆறுதல் பரிசாக 10 ஆசிரியர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
  • மேலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இணைய வழியே சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தமிழக அளவில் முதல் மூன்று படைப்புகளுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
  • இந்த போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய கடைசி நாள் 24-07-2021 ஆகும்.
  • மேலும் http://shikshashilpi.vvm.org.in/aahaarkranti/ என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
  • வீடியோ மற்றும் படைப்புகளை அனுப்ப கடைசி தேதி – 30.09.2021
  • போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி – 22.12.2021
  • மேலும் இது குறித்த விவரங்களுக்கு 8778201926 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!