கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு – உயர்நீதிமன்றம் கருத்து!
கொரோனா காரணமாக உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு தொகை வழங்க முடியாது, அது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இழப்பீடு தொகை
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் பல பாதிப்புகளை உருவாகியுள்ளது. கொரோனா நோய் பரவலானது ஒவ்வொரு தனி மனிதன் துவங்கி அரசு வரை மிகப்பெரிய அளவு கஷ்டத்துக்குள்ளாகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இறப்பு எண்ணிக்கையானது இந்த ஆண்டை விட குறைவாகவே காணப்பட்டது.
இ-ஆதார் ஆன்லைனில் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!!
மேலும் கொரோனா 2 ஆம் பரவல் மூலம் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அதே போல தமிழகத்திலும் ஒரு நாளைக்கு 400க்கு மேல் இறப்புகள் ஏற்படுகிறது. இதனால் பல குடும்பங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்த இழப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் மாறாத வடுவாக அமைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருதி மத்திய அரசு பல திட்டங்களை வகுக்க ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் இழப்பீடு நிவாரணம் வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.