Common Wealth 2022: ஊக்க மருந்து விவகாரம் – தமிழக தடகள வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!

0
Common Wealth 2022: ஊக்க மருந்து விவகாரம் - தமிழக தடகள வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!
Common Wealth 2022: ஊக்க மருந்து விவகாரம் - தமிழக தடகள வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!
Common Wealth 2022: ஊக்க மருந்து விவகாரம் – தமிழக தடகள வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!

காமன்வெல்த் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தமிழக தடகள வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை போல் மற்றொரு தமிழக தடகள வீரர் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை

2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்ஹாமில் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெற்றது. முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் எண்ணும் & எழுத்தும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை!

மேலும் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வாரிக் குவிக்கும் துப்பாக்கி சுடுதல் போட்டி இம்முறை நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், காமன்வெல்த் தடகள போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா 36 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவை அறிவித்தது. இந்நிலையில் 72 நாடுகள் பங்கேற்று இருக்கும் இந்த போட்டிகளில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது. இந்த காமன்வெல்த் தொடரில் 200 மீட்டர் தடகளம் மற்றும், ரிலே போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி சேகர் கலந்து கொள்ள இருந்தார்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில், காமன்வெல்த் தொடருக்கு முன்பாக அனைத்து நாடுகளின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தனலட்சுமி சேகர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து காமன்வெல்த் போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதாக கூறி அவருக்கு விதிக்கப்பட்ட தடை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி, தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக தடகள வீரர் மகிமைராஜ் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!