Common Wealth 2022: பந்து உருட்டுதலில் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!
நான்காவது நாளாக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பந்து உருட்டுதல் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு 2022
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று கொண்டிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022 இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 29 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 211 இந்திய போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். எப்போதுமே துப்பாக்கி சுடும் போட்டியில் தான் இந்தியா அதிக பதக்கத்தை வெல்லும். ஆனால், இம்முறை காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டி சேர்க்கப்படவில்லை.
திருப்பூரில் நாளை (ஜூலை 28) மின்தடை – பகுதி விவரம்! மின்வாரியம் தகவல்!
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அதிக அளவில் மகளிர் அணிகள் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளனர். 49 கிலோ மகளிர் எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு தங்க பதக்கத்தை வென்றுள்ளார். அதே போல ஆண்களுக்கான பிரிவில் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சாங்கேட் வெள்ளி பதக்கத்தையும், 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் குருராஜா வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டியில் கிளின் அண்ட் ஜர்க் 116 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதுவரைக்கும் இந்தியா மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தமாக 6 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. இதனையடுத்து, போட்டியின் நான்காவது நாளான இன்று பந்து உருட்டுதல் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியிலும் இந்தியா பதக்கத்தை உறுதி செய்துள்ளது. அதாவது, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 16-13 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்குள் இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது.