தமிழகத்தில் நூலகங்களின் வளர்ச்சிக்காக குழு அமைப்பு – அரசாணை வெளியீடு!
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் இயங்கி வரும் நூலகங்களில் வளர்ச்சி பணியை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நூலகம்:
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கல்வித்துறை சார்பாக பொது நூலகங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் நூலகம் மற்றும் சென்னை மாநகர பொது நூலகம் ஆகியவற்றின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
தமிழக அரசின் திட்டங்களை அறிய உதவும் whatsapp – எப்படி? வழிமுறைகள் உள்ளே!
Follow our Instagram for more Latest Updates
அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கையில், மாநில நூலக குழு 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதற்கு பின் இக்குழுவானது மாற்றி அமைக்கப்படவில்லை. அதேபோல சென்னை மாவட்ட நூலக நிர்வாக குழுவில் 2011 க்கு பிறகு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
தற்போது மாநில நூலகங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு அனுபவம் மிக்க 15 அதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல கவிஞர், எழுத்தாளர் உள்ளிட்ட 11 உறுப்பினர்களை கொண்டு சென்னை மாநகர நூலக ஆணையக் குழுவையும் தமிழக அரசு அமைத்து அதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.