தமிழக தனியார் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணம் வசூல் – ஆணையர் உத்தரவு!
கொரோனா பேரலை காரணமாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு 2 கட்டங்களாக 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 25% கட்டண வசூல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கட்டணம் வசூல்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகள் தற்போது வரை முழுமையாக திறக்கப்படவில்லை. இதற்கிடையில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வகுப்புகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என சில பள்ளிகள் நிர்பந்தித்து வருவதாக புகார்கள் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் எந்தெந்த ரேஷன் அட்டைகளுக்கு மாதம் ரூ.1000? வெளியான தகவல்!
அதாவது தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல குடும்பங்களில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தனியார் பள்ளிகள் இப்போதைக்கு 75% கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் கொரோனா 2 ம் அலை தீவிரமடைந்து வந்ததால் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதாவது கொரோனா முழு முடக்கத்தால் பொது மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து உதவி பெறாத தனியார் பள்ளிகள் 75 % கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவற்றில் 40% கட்டணத்தை முதல் தவணையாக வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள், இரண்டாம் தவணையாக 35% பணத்தை இந்த ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கி 2 மாதங்களில் வசூலிக்க வேண்டும். மீதமுள்ள 25% கட்டண வசூல் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.