தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையர் சுற்றறிக்கை – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் காவல்துறை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் மின்சார பொருள்கள் பயன்படுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார். மேலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மின்சார விபத்துகளை தடுக்கவும், மின் பழுது ஏற்படாமல் இருக்கவும் ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மின்சார தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து புகார்கள் வந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் மின்சாரத்தை மக்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தினால் மட்டுமே தடையில்லா மின்சாரம் என்பது சாத்தியம் ஆகும் என்பதால் மக்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அது போல இந்தியாவில் வர கூடாது என முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு துறையான காவல்துறையில் மின்சார பயன்பாடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் இன்று (ஜூலை 12) கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
அதன் படி தமிழகத்தில் காவல்துறைக்கு சம்பந்தமான அலுவலகத்தில் மின்சாதன பொருட்கள் பயன்பாடு தேவைப்படாத பட்சத்தில் அணைத்து வைக்க வேண்டும் என அனைத்து காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மேலும், காவல்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை சரியாக கடைபிடிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.