சிலிண்டருக்கான விலை உயர்வு.. ரத்து செய்யப்பட்டுள்ள தள்ளுபடி – பொதுமக்கள் அதிர்ச்சி!

0
சிலிண்டருக்கான விலை உயர்வு.. ரத்து செய்யப்பட்டுள்ள தள்ளுபடி - பொதுமக்கள் அதிர்ச்சி!
சிலிண்டருக்கான விலை உயர்வு.. ரத்து செய்யப்பட்டுள்ள தள்ளுபடி - பொதுமக்கள் அதிர்ச்சி!
சிலிண்டருக்கான விலை உயர்வு.. ரத்து செய்யப்பட்டுள்ள தள்ளுபடி – பொதுமக்கள் அதிர்ச்சி!

நாடு முழுவதும் சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பிட்ட சதவீதம் மானியம் அளிக்கப்பட்டு வந்தது. இனி, இது போன்ற எந்த மானியமும் இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தள்ளுபடி ரத்து:

நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி),ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) மற்றும் பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) ஆகிய மூன்று நிறுவனங்களும் பயன்பாட்டில் உள்ள சிலிண்டர்களை வழங்கி வருகிறது. ஆனால், நாளடைவில் சிலிண்டர் விலையானது எரிபொருள் விலை ஏற்றதினால் உயர தொடங்கியது. இதனால், மத்திய அரசு சிலிண்டர்களுக்கான மானியத்தை அளிக்க திட்டமிட்டு வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

வீட்டு பயன்பாட்டிற்கான சாதாரண சிலிண்டர்களை தவிர்த்து, வணிக பயன்பாட்டிற்கான கூடுதல் எடை கொண்ட சிலிண்டர்களும் விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் முன்னதாக ரூ.200 அல்லது ரூ. 300-க்கான தள்ளுபடியை வழங்கி வந்தது.

தென்கிழக்கு வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!

Follow our Instagram for more Latest Updates

ஆனால், விநியோகஸ்தர்கள் வணிக சிலிண்டர்களுக்கு அதிக தள்ளுபடியை அளிப்பதாக பலமுறை புகார்கள் எழுந்துள்ள நிலையில், வணிக சிலிண்டர்களுக்கான தள்ளுபடி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 8ம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலாக்கப்பட்டுள்ளது என்றும் அனைத்து எடையிலும் உள்ள வணிக சிலிண்டர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!