இன்றும், நாளையும் கடைகள் & மால்கள் அடைப்பு – கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் இன்றும், நாளையும் (செப்டம்பர் 4, 5) உட்பட 2 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கமானது செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் பள்ளிகள், திரையரங்குகள், மால்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. தவிர வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை 3 நாட்களுக்கு மத வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்ட்டுள்ளது.
Tokyo Paralympics துப்பாக்கிச்சுடுதல் – இந்திய வீரர்கள் தங்கம் & வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!
இதனிடையே கோவை மாவட்டத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் மட்டும் வார இறுதி நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கோவை மாநகராட்சி முழுவதும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ஜவுளி கடைகள், நகைக் கடைகள், மால்கள், பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் நடப்பாண்டு நீட் தேர்வு நடைபெறும், அடுத்தாண்டு விலக்கு – அமைச்சர் தகவல்!
திருமண மண்டப உரிமையாளர்கள், மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வட்டாட்சியரிடம் முறையான அனுமதி பெற்று திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டும். தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 50 பேர் வரை மட்டும் திருமணம் உட்பட பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.