கோவையில் திருமணம் நடத்த திட்டமிடுவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் தற்போது மாவட்ட ஆட்சியர் கொரோனா விதிமுறைகள் குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
புதிய வழிமுறைகள்
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வந்தது. அதே போல் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதுடன் பல வித தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிப்பு -கொரோனா தொற்று தீவிரம் எதிரொலி!
அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் பதிவு செய்யப்படும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து ஊரடங்கு தளர்வுகள் மற்றும் வழிமுறைகளை பிறப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது கோவை மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
கோவை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றிருத்தல் அவசியம். அதே போல் திருமண மண்டபங்களில் கொரோனா விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். கோவையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.