சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகமான நகைப்பிரியர்கள் உள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,560க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம் ஆகிய தேவைகளுக்கு இந்த முதலீடுகள் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மதிப்பு உயர்த்து கொண்டுதான் இருக்கும்.
ஐந்து ஆண்டு காதல் கதையை முதன்முறையாக சொன்ன “குக் வித் கோமாளி” புகழ் – ரசிகர்கள் வாழ்த்து!
நடப்பு ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து இருந்தது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தொற்று பாதிப்பு காரணமாக ஆபரணத் தங்க விலை மேலும் அதிகரித்து வருகிறது. ஆனால் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,695க்கு விற்பனையாகிறது.
தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கால அவகாசம் பிப்.18 வரை நீட்டிப்பு!
மறுபுறம் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.68.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவு நகைப்பிரியர்களிடம் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.