ரோஜா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு டாப் ஹிட் தொடர் – ரசிகர்கள் ஷாக்!
சமீப காலமாக பல தமிழ் சீரியல்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் பச்சைக்கிளி சீரியல் மற்றும் வள்ளி திருமணம் சீரியல்களின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒரு மணி நேர எபிசோடாக நாளைக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீரியல்கள் முடிவு:
தமிழில் பல முன்னணி சேனல்கள் மத்தியில் கலர்ஸ் தமிழ் சேனல் பல வித்தியாசமான கதையுடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் கலர்ஸ் தமிழில் சேனல் மாற்றத்திற்காக அனைத்து சீரியல்களும் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியானது. சில்லுனு ஒரு காதல் சீரியல், மந்திர புன்னகை என ஒவ்வொரு தொடராக முடிக்கப்பட்டது. இன்னும் பச்சைக்கிளி மற்றும் வள்ளி திருமணம் உள்ளிட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன்? கடைசி இரு இடங்களில் இருக்கும் போட்டியாளர்கள்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது பச்சைக்கிளி சீரியலும், வள்ளிதிருமணம் சீரியலும் கிளைமேக்ஸ் காட்சிகளை நெருங்கிவிட்டது. நாளை ஜமீலா சீரியலுக்கு பதிலாக பச்சைக்கிளி சீரியல் 7 மணி முதல் 8 மணி வரை 1 மணி நேர எபிசோடாக ஒளிபரப்பு செய்யப்பட்டு முடிக்கப்பட இருப்பதாகவும், 8 மணி முதல் 9 மணி வரை வள்ளி திருமணம் சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகி முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Follow our Instagram for more Latest Updates
அதன் பின் கண்ட நாள் முதல் சீரியல் முடிய இருப்பதாகவும், அடுத்த வாரம் ஜமீலா சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பச்சைக்கிளி மற்றும் வள்ளி திருமணம் ஆகிய இரு சீரியல்களும் நல்ல கதையுடன் தொடங்கப்பட்ட நிலையில் இவ்வளவு சீக்கரம் முடிய இருப்பதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்.